Thursday, 25 September 2008

மரணத்துள் வாழ்வோம்


வன்னி யுத்த முனையில் கடந்த வாரங்களில் கடும் மோதல்கள் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன் பகுதிகளில் இடம் பெற்று வந்த கடும் போர் தற்போhது கிழக்கு வன்னி நோக்கியும் நகர ஆரம்பித்திருக்கின்றது.

விடத்தல்தீவு, வெள்ளாங்குளம், முழங்காவில், ஆகிய மேற்கு வன்னிப் பிரதேசங்களை கடும் எதிர்ப்புகளின்றி கைப்பற்றிய அரசபடைகள் நாச்சிக்குடாவை கைப்பற்ற முடியவில்லை ஏ9 வீதியில் திரு முறிகண்டியில் இருந்து ஆரம்பித்து அக்கராயன், வன்னேரி, ஜெயபுரம் ஊடாக ஏ32 வீதியில் பல்லவராயன் கட்டில் இணையும் அக்கராயன் குளம் வீதி படைத்தரப்பின் உயர்ந்த பட்ச இலக்காகத் தற்போதுள்ளது. இவ்வீதியை அடைவதற்காகவே கடந்த வாரங்களில் கடும்
சண்டை மூண்டிருந்தது. எனவே இவ்வீதி மரண வீதியாக மாறுவது தவிர்க்க முடியாததாகின்றது.

ஏனெனில் இவ் வீதிக்குத் தெற்கே ஒரு மைல் இடைவெளியில் வீதிக்குச் சமாந்தரமாக கிழக்கு மேற்காக புலிகள் அமைத்திருக்கும் பாதுகாப்பு முன்னரண் நாச்சிக்குடாக் கடற்பரப்பிலிருந்து அக்கராயனுக்கு கிழக்கு வரை அதாவது அமைதிபுரம் வரைக்கும் ஏன் திருமுறிகண்டி வரைக்கும் சுமார் 26 மைல்கள் வரை நீண்டு செல்கிறது. இந்த வீதியினு}டாகவே பல்லவராயண் கட்டு, கரியாலை நாகபடுவன், மணியங்குளம், கிராஞ்சி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி நாச்சிக்குடாவை இராணுவத்தின் பழைய பல்லவியான பெட்டியடித்தல் முறை மூலம் கைப்பற்ற முயல்கின்றனர். இம்முயற்ச்சி பயனளிக்காது போகவே ஏ9 வீதியைப் படைகள் குறிவைக்கின்றனர். இதனால் ஏ9 வீதியினு}டாக புலிகளுக்கு கிடைத்துவரும்
உதவிகளை தடுத்துவிடலாம் என நம்புகின்றனர்.

பொதுவாகப் படைகள் மேற்கு வன்னியில் முன்னேற முடியாத ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிழக்கு நோக்கியே தமது முன்னேற்ற முயற்ச்சியை மேற்கொண்டனர். தற்போதும் அவர்கள் அம்முயற்ச்சியையே மேற்கொள்கின்றனர். ஆனால் படைகள் வன்னியின் கிழக்கு நோக்கி அதாவது ஏ9 நோக்கி ஒரு முன்னேற்ற முயற்ச்சியை மேற்கொண்டு புலிகளை இந்தப்பக்கம் போக்குக் காட்டிவிட்டு நாச்சிக்குடா, அக்கராயன், மற்றும் வன்னேரிப் பகுதிகள் நோக்கி திடீரென முன்னேறி அப்பகுதிகளைக் கைப்பற்ற முயல்கின்றனர். அதேபோலவே வன்னிவிளாங்குளம், மற்றும் பாலமோட்டைப் பகுதிகளிலிருந்தும் ஏ9 வீதியைப் படைகள் குறிவைக்கின்றனர்.


அத்துடன் கடந்த வாரம் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் விடுதலைப்புலிகள் இரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினர் என்பதே. தமது அழிவு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் புலிகள் இயலாமையின் விரக்தி காரணமாக கடந்த 15ஆம் திகதி தங்களிடம் இருந்த கடைசி அஸ்திரமான நச்சு வாயுக்களைப் பயன்படுத்தினர் என படைகள் பிரச்சாரம் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் நச்சு வாயூ அல்ல கலகத்தை அடக்கப் பயன்படு
ம் ஸிஎஸ் (CS.Gas) என அறிவித்தனர். உண்மையில் இவ்வகை வாயூக்கள் பேராபத்தை ஏற்படுத்தக் கூடியதல்ல. வெறும் கண் எரிவுத்தன்மையையும், தலைச்சுற்று வாந்தி போன்றவற்றையுமே ஏற்படுத்தக் கூடியது.

விடுதலைப்புலிகள் இரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். என்று கூறுவதன் மூலம் வன்னிப் போர் முனையில் படைத்தரப்பு இரசாயண ஆயுதங்களை அல்லது அல்லது இரசாயண வாயுக்களைப் பயன்படுத்த முற்படுகின்றது. அ
த்துடன் புலிகள் இரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் அந்த இரசாயண வாயுத்தாக்குதல்களை தாம் சந்திக்கத் தயாராக இருப்பதாக படைத்தளபதி சரத்பொன்சேகா தெரிவி;த்தார்.

மேலும் அவர் கூறும்போது “விடுதலைப்புலிகள்” ஸிஎஸ் ரக ரசாயணங்களை எம்மீது ஏவுவார்களாயின் அதிலும்
நச்சுத்தன்மை கூடிய ஆயுதங்களை அவர்கள் மீது ஏவுவதற்கு இறமையுள்ள அரசு என்ற ரீதியில் எமக்கு சகல உரிமையும் உண்டு. தேவையேற்படின் இவற்றைப் பயன்படுத்தத் தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளதிலிருந்து அரசு இவ்வகை வாயுக்களைப் பயன்படுத்துவதற்கு தயாரக உள்ளநிலையில் புலிகள் தான் இவ்வகை இரசாயணத்தாக்குதல்கள் நடாத்தினார்கள் அதனாலேயே நாமும் அவர்கள் மீது இவ்வகைத் தாக்குதல்களை நடாத்தினோம் எனக் காரணம் கூறலாம் அல்லவா?

அதாவது அரசபடைகள் வன்னி மேற்கைக் கைப்பற்றி வன்னியின் கிழக்குப் பகுதியான முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதி நோக்கி மேலும் நகரும் போது சண்டைகள் கூடுதலாக நேருக்கு நேர் இடம்பெறும் அந்த நேரத்தில் புலிகளின் கையே மேலோங்கும் என்பது படைகளுக்கு நன்கு தெரியும். ஆகவே அந்த நேரத்தில் இந்த நச்சு ஆயுதங்களைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் முண்ணனிப் படைகளை பலவீனப்படுத்தி இலகுவாக அப்பிரதேசங்களைக் கைப்பற்றலாம் என படைத்தரப்பு நம்பியிருக்கலாம்.

அரசபடைகளிடம் இவ்வகை இரசாயண ஆயுதங்கள் ஏற்கனவே உள்ளன. இதற்கு ஆராதமாக சிறுத்தீவுத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்ட இரசாயண ஆயுதத் தடுப்புத் தலைக் கவசங்கள் இன்று சான்று பகர்கின்றன. அத்துடன் 17.08.2001 இல் விடுதலைப்புலிகளின் வன்னித் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அரசு இரசாயண ஆயுதத்தைக் கொள்வனவு செய்திருக்கின்றன அதை நம் இனத்தை அழிப்பதற்கு பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்கு முற்படுகின்றனர். எனத்தெரிவித்தனர். இதை அப்போது அரசு புலிகள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர் எனக் கூறித் தப்பிவிட்டனர். ஆனால் இன்று அது உண்மையாக்கப்பட்டு விட்டது.

இது இப்படியிருக்க உணவை ஆயுதமாக அரசு பயன்படுத்த முற்படுகிறது. வன்னியில் படையினர் எதிபார்த்த வெற்றி அவர்களுக்கு இல்லை. எனவே மக்களை வன்னியில் இருந்து வெளியேற்றிவிட்டால் புலிகள் தனிமைப் பட்டுவிடுவார்கள். இதனால் அவர்களை இலகுவாக அழித்துவிடலாம் என படைத்த
ரப்பு கணக்குப் போட்டுள்ளது.

இதனாலேயே வவுனியாவுக்கு மக்களை வரவழைத்து அங்கு அவர்களைத் தங்கவைக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் ஒருவர் கூட அங்கு வரவில்லை. அவ்வாறு வந்தால் என்னநடக்கும் என்பது நன்றாகவே அவர்களுக்குப் புரியும் அதாவது அவர்கள் வவுனியா வந்தால் இளைஞர்கள், யுவதிகள். வேறாகப் பிரிக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். அத்துடன் கடத்தல்கள், காணாமல்ப் போதல்கள் தாராளமாக இடம்பெறும். மேலும் அவர்கள் தற்காப்புப் பயிற்ச்சி எடுத்தவர்கள் எனக்கூறி அவர்களைத் தடுப்புக்காவல்களில் வைக்கவும் முற்படலாம் எனவே இவற்றையெல்லாம் உணர்ந்த மக்கள் நாம் செத்தாலும் விடுதலைப் புலிகளுடனும், தம்மை நம்பி போராடத்துணிந்த தேசியத்தலைவருடனும் தான் இறுதிவரை இருப்போம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.


எனவே வவுனியாவுக்கு மக்களை வரவழைக்க மேற்கொண்ட முயற்ச்சியும் தோல்வியில் முடிய அனைத்துலக தொண்டு நிறுவனங்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்று அதிலும் அரசு வெற்றிபெற்றது எனவே அதிலும் வன்னியில் உள்ள தமிழ்மக்களை அசைக்க முடியவில்லை. எனவே தற்போது வன்னியில் அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வெளியேறியதும் மக்கள் மீது கண்மூடித் தனமான நவீன ரக ரொக்கட்கள் மூலம் விமானத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம் வெளியில் சொல்ல அவர்கள் கூட இல்லையல்லவா?

இதிலும் அம்மக்களை அசைக்க முடியாது போகவே உணவை ஆயுதமாக்கி அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முற்படுகின்றனர். அத்துடன் உணவை தடுப்பதன் மூலம் வன்னிமக்களை வெளியேற்றினால் அங்கு மக்கள் இல்லை. ஆகுவே அங்கு உணவுஅனுப்ப வேண்டிய தேவையிராது. இதன் மூலம் அங்கு உணவுப் பொருட்கள் எதனையும் அனுப்பாது புலிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு ஆட்பற்றாக்குறையையும் ஏற்படுத்தி அவர்களை அழித்துவிடலாம். என்பதே படைகளது திட்டம். இதே போலவே நைஜீரிய மக்களையும் அடக்கினார்கள் என்பது வரலாறு.

எனவே புலம்பெயர்ந்த மக்கள் அனைவரும் வன்னியில் வாடும் எம்மக்களுக்கு எங்களாலான பங்கினை மேற்கொள்ளவது நமது கடமையே. ஏனெனில் இப்படியானதொரு முற்றுகைக்குள் பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்கள் அகப்பட்டபோது பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு ஏனைய புலம்பெயர் நாடுகளில் உள்ள யூதர்களால் உருவாக்கப்பட்டதே இன்றைய இஸ்ரேல் ஆகும். எனவே நம் தமிழின அழிப்பின் இறுதிக்கட்டத்தை உடைக்கவேண்டியது நம் புலம்பெயர் தமிழர்களின் கடமையே




No comments: